Dec 26, 2017

திரி- 2 (தொடர்கதை)


Coffee-vending machineல், இருக்கும் QR code ஒன்றை ஸ்கேன் செய்தான் சீலன் தனது கைபேசியிலுள்ள application மூலம். machineல் உள்ளே இருந்த காபி குவளைகள் பளிச்சென்று மின்னியது. தனக்கு ஒரு latte குவளையும், காபி மிஷினில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த யுவிக்கு ஒரு cappacino குவளையும் ஆர்டர் செய்ய பொத்தான்களை அழுத்த அவனது விரல்கள் முற்பட்டபோது, சீலனின் கையை தடுத்து, யுவி, “எனக்கு வேணாம். I will just share your latte.” என்றான்.

‘confirm’ ஆர்டர் பொத்தானை அழுத்துவதற்கு முன், யுவி, 25% sugar என்பதை அழுத்திவிட்டு சீலன் முகத்தைப் பார்த்து, “you’re getting old, pappu”
யுவி சொன்ன உண்மையை ஆமோதித்தவாறு, புன்னகையித்தான் ‘பப்பு’.

சூடான காபியை நுகர்ந்தபடியே சீலன், “ammamma embarrasses me all the time. எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க.” காபி குவளையை உதட்டில் வைத்து கொஞ்சம் குடித்துவிட்டு, யுவியிடம் குவளையை நீட்டினான். 

“இப்ப யாரு?”

“ஏதோ அபியாம்.”


குவளையை வாங்கி கொண்ட யுவி, சீலனின் மீசையில் லேசாய் படர்ந்த காபி சொட்டுக்களை துடைத்தவாறு, “அம்மம்மாகிட்ட சொல்லு, அபி வேணாம். யுவி போதும்னு.”

சின்னதாய் புன்னகையுடன் சீலன், “I wish it was that easy.”


கைபேசியில் குறுந்தகவலுக்கு பதில் அளித்தபடி காபி மிஷினை நோக்கி நடந்தவந்த ஜெகன், சீலனைப் பார்த்து ஆச்சிரியமாய், “ஹேய் சீலன், எப்படி இருக்கீங்க?”

“ஐ எம் குட். நீங்க ஜெகன்?”

“always fantastic.”

பக்கத்திலிருந்த யுவியை ஜெகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் சீலன். ஜெகனும் ஒரு காபியை வாங்கி கொண்டான். காற்பந்து, புது வருடம், கார் விலை ஆகியவற்றை பேசி கொண்டிருந்தனர் மூவரும். சீலன் முகத்தைக் கவனித்த ஜெகன்,

“you look dull. என்ன? பாட்டி… torture தாங்க முடியலயா?”

“பாட்டி சொன்னாங்களா?”

“சீலன், you are old enough to take your own decisions. உங்க மனசுக்கு என்ன தோணுதோ அத செய்ங்க, ரொம்பலாம் யோசிக்க கூடாது..” என்று சொல்லிவிட்டு ஜெகன் வாய்விட்டு சிரித்தான்.

சிரித்து கொண்டே ஜெகன், “hey why not both of you come join me tonight at dollar room. செம்மயா இருக்கும் பார்ட்டி இன்னிக்கு.” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டி, “special party. You know what I mean, right?” 

பதில் புன்னகை வீசிய சீலன் வேண்டாம் என்று நாசுக்காய் சொன்னான்.

மறுபடியும் ‘mark boi’யிடமிருந்து அலைபேசி வர, கிளம்பினான் ஜெகன்.

காபியை உறுஞ்சி குடித்தான் யுவி. மழை வர அறிகுறிகளை காட்டிய வானம் கொஞ்சமாய் இருண்டது. சுற்றியிருந்த மரங்களிலிருந்த இலைகள் வீணையை மீட்டிய விரல்கள்போல் விளையாடி அசைய, குளிர் காற்று சீலனின் முகத்தில் வீச, 10-வினாடி நிம்மதியையும் அதே நேரத்தில் ஒருவித சஞ்சலத்தையும் தந்தது.
பெருமூச்சு விட்ட சீலன், “எல்லாத்தையும் சொல்லிடலாம் ஆனா….”

காபி குவளையை சீலனிடம் நீட்டிய யுவி, “அப்பரம் என்ன?”

“it’s going to hurt everyone.”

“இப்ப மட்டும் என்ன?”

முழித்தான் சீலன்.

“மத்தவங்க கஷ்டப்பட கூடாதுனு நீ உனையே கஷ்டப்படுத்திகிட்டு இருக்க, பப்பு. What is the worse that can happen?”

“இல்ல விடு யுவி. இத பத்தி நிறைய பேசியாச்சு. அப்பரம் கடைசில சண்டை தான் வரும்.”
“you are not true to yourself. And I am equally confused. என் நிலமல யோசிச்சு பாரு. What am I suppose to do?”

“எவ்வளவு வருஷம் ஆனாலும் வேட் பண்ணலாம்னு சொன்ன?”

மௌனம் பேசியது. மௌனம் மட்டுமே பேசியது. குடித்து முடித்துவிட்ட காபி குவளையை தூக்கி ஏறிந்தான் சீலன். வலது கட்டவிரலால் தனது இடது கைரேகை ஒவ்வொன்றாய் வருடி கொண்டிருந்தான் சீலன்.

“யுவி, நான் வெளியே வேட் பண்றேன். அம்மம்மா வந்தாங்கனா, கார்கிட்ட அழைச்சுட்டு வந்துரு.”

“why are you running away from the problem?”

யுவி அவ்வாறு கூறியதும், மனதில் எரிமலை வெடித்ததுபோல் இருந்தது. புருவங்களை சுருக்கி, சீலன் ஒரு குழப்ப பார்வை விட்டான். முறைத்தான். அவ்விடத்தைவிட்டு வேகமாய் நடந்தான். 


கோயிலிருந்து 300மீட்டர் தூரத்திலுள்ள ஒரு பஸ் டாப். காலியான இருக்கை இரண்டு இருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்து, தன் கோபத்தை தணிக்க கண்களை இறுக்க மூடி கொண்டு வாய் வழியாய் சுவாசத்தை உள் இழுத்தான்.

பின்தொடர்ந்த யுவி, “see, this is you. Always running away from the problem.”

 வேகமாய் நடந்து வந்த காரணத்தால் அவனுக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது என நினைத்து கொண்ட சீலனுக்கு உண்மையாகவே anxiety attack வந்தது. தனக்குள் என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாலும் மூச்சை இழுத்து பிடித்தான்.

யுவி, “கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி, நம்ம Canada போய் settle ஆகலாம்னு சொன்னே. அப்பரம்… வேணாம்ணு சொன்னேன்.” பேருந்து நிறத்து இடத்தில் கத்தினான். அவ்வழியே சென்ற ஒரு சீன கிழவி அவர்களை ஒரு மாதிரியாய் பார்த்தார்.

யோகா வகுப்பில் சொல்லி கொடுத்ததை அறைகுறையாக செய்ய தொடங்கினான் சீலன். யுவி கத்துவது கொஞ்சம் கேட்டது. மண்டையில் ஏதோ அலைகள் கல்லை இடிப்பதுபோல் உணர்ந்தான். இந்த மாதிரி நிறைய முறை anxiety attack வந்திருக்கிறது. அப்போதும் இதே மாதிரி ஏதேதோ செய்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சி செய்வான்.

“அப்பர்ம்…. இல்ல இங்க இருப்போம்….35 வயசு ஆன பிறகு ஒரு வீடு வாங்கலாம். ஒன்னா இருக்கலாம்னு சொன்னேன். இப்போ… back to square one.”

கண்களை திறந்தான். இருண்ட வானம் அப்படியே இருந்தது. தலை இன்னும் சுற்றி கொண்டிருந்தது. லேசாக வேர்வை. கட்டைவிரல் நடுங்கியது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. யுவி பையில் ஏதேனும் இருக்குமா என யுவியிடம், “யுவி, do you have water?”

யுவி காதில் எதுவும் விழவில்லை.

“சீலன், உனக்கு உங்க அப்பா அம்மா அம்மம்மா எல்லாரும் முக்கியம். But not me….”

இரு கரங்களாலும் தலையை பிடித்தவாறு கீழே குனிந்தான். வாந்தி வருவதுபோல் இருந்தாலும் சமாளித்து கொண்டான். மறுபடியும் யுவியிடம்,
“ யுவி, தண்ணி இருக்கா?”

யுவி எந்த பதிலும் சொல்லவில்லை.

யுவியை விட்டு விட்டு மெதுவாய் கார் நிறுத்திய இடத்திற்கு நடந்தான் சீலன். வாகன பின்புறத்தை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார் பாட்டி. பாட்டியை கண்டவுடன் இன்னும் மின்னல்வேகத்தில் கால் அடி வைத்தான் அவன் மயக்கதில் துடித்தாலும். கார் கதவை திறந்தவாறு, “அம்மம்மா, கோயிலுக்குள்ளயே வேட் பண்ண வேண்டியது தானே?”

“எங்க யுவி?”

“அவன் mrtல போறேனு சொல்லிட்டான்.”

“ஏண்டா கொஞ்சம் வேட் பண்ணி நமக்குகூட வந்துருக்கலாம்ல.”

கார் ஏசியை போட்டுவிட்டு, தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்தான். கைபேசியை chargeல் ஏற்றிவிட்டு, reverse gearயை மாற்றினான். வாகனம் பின்னாடி நகர, பாட்டி, “சீலா, அபி அம்மாகிட்ட பேசினே. கிறிஸ்துமஸ் லீவு அன்னிக்கு அபி free தான். நீ போய் பாத்து பேசுறீயா? நல்ல பொண்ணுடா.”

கைபேசி குறுந்தகவல் ஒலி எழுப்பியது. ஸ்கீரினை unlock செய்தபோது, ஒரு whatsapp செய்தி தெரிந்தது. யுவியிடமிருந்து,

“I don’t think this is working out. Again. Bye.”

தகவலை படித்துவிட்டு கைபேசியை chargeல் வைத்துவிட்டு, reverse gearலிருந்து ‘Drive’ gearக்கு மாற்றிவிட்டு, காரை வேகமாய் செலுத்தினான்.


*முற்றும்*

2 comments:

Unknown said...

Onnume puriyala..was really excited to read ur story after a v longgggg time..but..😭😭😣😣

FunScribbler said...

@viji hahaha puriyalaiya?? appo naanum periya writer thaan!
yeppa paarunga...naanum rowdy thaan. naanum rowdy thaan!