Sep 27, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-3

தனுஜாவை வெளியே கூட்டிகொண்டு போக விஷ்ணுவிற்கு ஆசை இருந்தாலும், உள்ளூர ஒரு பயம். ஃபோனில் மட்டுமே பேசி இருக்கிறார்கள். அவ்வபோது பண்டிகை நாட்களில் வாழ்த்து குறுந்தகவல்கள். முதன் முறை சந்திக்க போகும் தருணத்தை எண்ணி விஷ்ணுவிற்கு மகிழ்ச்சி. இருந்தாலும், அவள் அதை எப்படி எடுத்து கொள்வாள் என்று தெரியவில்லை. தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்னும் தகவலை அவளிடம் நேரில் சொல்ல வேண்டும் என்ற ஆசை.

குறுந்தகவல் அனுப்பினான். குறுந்தகவல் என்னும் ஒன்றை கண்டுபிடித்தவனுக்கு சிலை வைப்பான் விஷ்ணு. அது மட்டும் உறுதி!

விஷ்ணு: ஹாய் தனுஜா, என்ன பண்ற?

தனுஜா: எருமைமாட்டுலேந்து பால் எடுத்துகிட்டு இருக்கேன். பின்ன என்ன மேன்.... project work விஷயமா தலைய பிச்சுகிட்டு இருக்கேன். என்ன இந்த நேரத்துல மெசேஜ்? anything important....

விஷ்ணு:ஹாஹா....ஒன்னுமில்ல சும்மா தான்.வெளியே போகலாமா?

குறுந்தகவலை பார்த்தவுடனே ஃபோன் செய்தாள் தனுஜா.

தனுஜா, "ஹாலோ விஷ்ணு, என்ன சாருக்கு திடீரென்னு என்னைய பாக்கனும்னு தோணுது?" சிரித்தாள்.

விஷ்ணு, "ரொம்ப நாள் பேசிகிட்டு இருக்கோம்.... நேரடியா பாத்துகிட்டா நல்லா இருக்குமேனு தான்..." இழுத்தான்.

"என்ன நல்லா இருக்குமேன்னு...." அவன் இழுத்ததுபோல் இவளும் பாவனை செய்து விஷ்ணுவை கிண்டல் செய்தாள்.

"சரி உனக்கு பிடிக்கலைன்னா, விட்டுடு!" சற்று கோபம் வந்தது விஷ்ணுவிற்கு.

"ஓய் ஓய்....எதுக்கு உனக்கு இப்படி கோபம் வருது. சரி போவோம். எங்க? எப்போ?" என்றாள் தனுஜா.

அவள் ஓகே சொன்னதுமே இளையராஜாவின் RR சவுண்டுகள் அவன் மனதில் அலைபாய்ந்தன.

"how about movie? நாளைக்கு?" கேட்டான் விஷ்ணு.

"முதன் முதலா பாத்துக்கு போறோம்....யாராச்சு படத்துக்கு போவாங்களா? நாளைக்கு i am not free." தனுஜா சொன்னாள்.

"நான் தான் உன்னைய முன்னாடியே பாத்து இருக்கேனே?" அன்று பார்த்ததை தனுஜாவிற்கு ஏற்கனவே சொல்லியிருந்தான்.

"நீ பாத்து இருக்க....நான் உன்னைய பார்த்ததுகிடையாதே? சரி சரி....வரேன்... அங்க யாரு கேன பய மாதிரி இருக்காங்களோ....அது நீயா தான் இருப்பே.... அடுத்த வாரம் திங்கட்கிழம போலாம்" சிரித்தாள் தனுஜா.

"ஐயாவோட smartness நீ பாத்து அசந்துபோயிட போற... அடுத்த வாரமா? இந்த வாரம் வெள்ளிக்கிழம??" என்றான்.

"ஆமா ஆமா....ambulanceலாம் standbyல இருக்க சொல்லிடுறேன்....அழகுல பாத்து மயங்கி விழுந்துட்டேனா? எனக்கு இந்த வாரம் நிறைய வேலை இருக்கு."

"ஷ்ஷ்... சனிக்கிழம?...." என்றான் விஷ்ணு.

"ஃபிரண்ட் அக்காவோட கல்யாணம்?" என்றாள் தனுஜா.

"என்ன எப்ப பாத்தாலும் அது இருக்கு இது இருக்குனு சொல்ற. எங்க ஏரியா எம் பிய பாக்ககூட சீக்கிரம் appointment வாங்கிடலாம் போல...." என்றான்.

"நாங்கலாம் அடுத்த 6 மாசத்துக்கு ஒரே பிஸி. ஏதோ சின்ன பையன் கேட்குறானேன்னு வரேன்....வேட் பண்ண முடியலன்னா.... no problem! i am fine with it." சற்று பிகு பண்ணினாள். ஆனால், அது அவனுக்கு பிடித்து இருந்தது.

"alrite alrite, அடுத்த வாரமே பாப்போம்." என்றவன் நேரம், இடம் போன்ற தகவல்களை கொடுத்தான் அவளிடம்.

அந்த நாளும் வந்தது. குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் காத்துகொண்டிருந்தான் விஷ்ணு. சின்ன பயம், ஒருவித சந்தோஷம்.
தனுஜாவை கண்டுகொண்டான், கையாட்டினான். அவனை நோக்கி அவள் நடந்து வந்தாள்.

இருவரும் புன்னகைகளை பரிமாறிகொண்டனர்.

"ஹாய்." இருவரும் சொன்ன முதல் வார்த்தை. ஃபோனில் அரட்டையும், கிண்டலுமாக இருந்தாலும், நேரில் சந்தித்த போது இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.

"என்ன தனுஜா ஃபோன்ல செமயா கிண்டல் அடிப்ப..இப்ப அமைதியா இருக்க?"

"நீ மட்டும் என்னவா.....?" என்று தனுஜா ஆரம்பிக்க, இருவரும் சகஜமாக பேசினர், சிரித்தனர், ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்து கொண்டனர்.

படம் பார்த்துமுடித்து வெளியே வந்தனர் இருவரும்.

"சாப்பிட போலாமா?" கேட்டான் விஷ்ணு. தனது கைபேசியை ஏதேனும் மெசேஜ் வந்து இருக்கா என்பதை பார்த்தவாறு பதில் அளித்தாள்,

"ம்ம்ம்...போகலாமே?"

"உனக்கு என்ன பிடிக்கும்?" என்று கேட்டான் விஷ்ணு.

"எனக்கு ஓசாமா பல்லு விலக்குற ஸ்டைல் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்" என்று நக்கல் அடிக்க, கைகளை அகல விரித்து சிரிக்க ஆரம்பித்தவன் நிறத்தவில்லை.

"ஓய்..control your laughter dude! this is a public place." என்றாள் தனுஜா.

"உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக் எல்லாம் அடிக்க வருது... நான் கேட்டது சாப்பாட்டுல என்ன பிடிக்கும்னு?"

"மொட்டையா கேட்டா வேற என்னத்த சொல்றது? சாப்பாடுன்னு நீ சொல்லவே இல்லையே..." என்று பேசி கொண்டே இருவரும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.

சாப்பாடு வருவதற்காக காத்து கொண்டிருக்கும் வேளையில்,

"எனக்கு வேலை கிடைச்சுடுச்சு....உன்கிட்ட சொல்ல தான் இந்த அவுட்டிங்!" என்றான்.

தனுஜா கண்களில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷம் போங்க,

"என்ன இப்ப தான் சொல்ற? congrats man...." என்று அவள் கைகளை நீட்டினாள். அவனும் நீட்டினான். அந்த ஸ்பரிசம் ஒரு கணம் அவனுக்குள் விளக்கமுடியாத மாற்றங்களை கொண்டு வந்தது. அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.

"ஹாலோ, ஆர் யூ ஒகே?" அவன் கண் முன் கையாட்டினாள்.

"இல்ல....shake hands பண்ணபோது அருவி தண்ணி பின்னாடி ரிவர்ஸ்ல போய் freeze ஆனுச்சு, காத்து ஒரு நிமிஷம் நின்னு போச்சு. வானத்துல மேகங்களுக்கு ரெட் சிக்னல் விழுந்துச்சு. இந்த மாதிரி ஒரு ஃவீல் வந்துச்சு.....உனக்கு ஒன்னும் ஃவீல் ஆகலையா? என்றான் விஷ்ணு.

சிரித்தபடியே தனுஜா, " ஏன் ஆகல? ரோட்ல மாடு நின்னு மாதிரி. குப்பையில பன்னிக்குட்டிங்க தேடுறத்த நிறுத்துன்னு மாதிரி.....சாக்கடையில எலிங்க ஓடுறது நின்ன மாதிரி இருந்துச்சே....."

மறுபடியும் சத்தம்போட்டு சிரித்தான்.

"நீ ரொம்ப தமிழ் படம் பாத்து கேட்டு போய் இருக்க?" புன்னகையித்தாள் தனுஜா.

அவளது கண்களையும் உதடுகளையும் பார்த்தவண்ணம் இருந்தான். அதை கண்டு கொண்ட தனுஜா மேசையின் மேல் இருந்த அவனது கைகளை செல்லமாய் அடித்து, " hey pervert, stop staring at me."

அவன் புன்முறுவலித்தான்.

"எங்க வேலை? எந்த கம்பெனி?"

"மும்பைல.... " என்றவுடன் அவள் முகத்தில் சோகரேகைகள் பரவுவதை பார்த்தான் விஷ்ணு.

"எப்ப போற?" என்றாள்.

"அடுத்த வாரத்துல...."

"எப்ப வருவ...?"

"திருப்பி எதுக்கு வரனும்? அங்கயே இருந்திட வேண்டியது தான்...." என்றான். தனுஜாவிற்கு கோபம் கலந்த அழுகை வர,

"அப்பரம்....எந்த இதுக்குடா என்னைய...." வாக்கியத்தை முடிக்கவில்லை. வேறு பக்கம் திருப்பிகொண்டாள் முகத்தை.

"உன்னைய....என்ன?" வேண்டுமே என்றே வெறுப்பேற்றினான்.

"ஒன்னுமில்ல." என்றாள்.

"சரி சரி....சும்மா தான் சொன்னேன். லீவு கிடைக்கும்போது திருப்பி இங்க வந்துடுவேன்." என்றான்.

"ம்ம்ம்....." அமைதிகாத்தாள் தனுஜா.

பின்னர், பலமுறை வெளியே சென்றனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தாலும், அதை சொல்லி கொள்ள தைரியம் இல்லை. தைரியம் இல்லை என்பதும் இருவருக்கும் தெரியும்.

பம்பாயில் விஷ்ணு பிஸியாக இருந்தான். தனுஜாவிற்கும் வேலை பளு அதிகரித்தது. இருவரும் பேசி கொள்ளும் வாய்ப்புகள் குறைந்தன. தனுஜாவின் பிறந்தநாள் அன்று அவளது ஆபிஸில்....

"ஏய் பேப், உனக்கு யாரோ lobbyல வேட் பண்ணுறாங்க" receptionist சொல்ல தனுஜாவும் வந்தாள். அங்கே விஷ்ணு. அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. பல நாட்கள் பேசவில்லை என்ற குற்ற உணர்வு அவளது கண்களில்.

"விஷ்ணு, what a surprise dude! how have you been?"

"i am good. how are you? happy birthday thanuja"

"தேங் யூ. தேங்ஸ் தேங்ஸ்.....நீ எப்ப மும்பைலேந்து வந்த? ஏன் ஃபோன் பண்ணல?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றாள்.

எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை விஷ்ணு. அவன் சொன்னது,

"ஐ லவ் யூ தனு. will you marry me?"

என்றாவது ஒரு நாள் சொல்வான் என்று காத்து கொண்டிருந்த தனுஜாவிற்கு அவன் சொன்னது அளவில்லாத சந்தோஷத்தை தந்தது.

***

" ரிப்போர்ட்ட முடிச்சுட்டீயா?" curtain துணிகளை மாற்றியவாறு விஷ்ணு.

"doing it.... do you need help to change the curtains?"

"i'll manage it dear." என்றான். அறைகளுக்கு சென்று ஃபோட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்தான். அச்சமயம் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொள்வதற்காக தனுஜா டிவி பார்த்தாள்.

oprah winfrey நிகழ்ச்சியை பார்த்தாள். குழந்தைநல மருத்துவர் ஒருவர் பேசியதை கேட்டு தனுஜாவின் நினைவு அலைகள் பின்னோக்கி சென்றன....

***
"ஐ எம் சாரி mrs vishnu...but உங்களுக்கு miscarriage ஆச்சு." மருத்துவர் கூறினார்.

(பகுதி 4)

14 comments:

mvalarpirai said...
This comment has been removed by the author.
mvalarpirai said...

Nalla iruku !

யாசவி said...

nice keep going

G3 said...

:))))))))))

Kalakkals :D Keep rocking :)))

*இயற்கை ராஜி* said...

:-))

gils said...

Wowww.. :) para parava rasichen :D woderful flow..enaku oru padamay kan munala oduthu :)) semma romatic

//ஆமா ஆமா....ambulanceலாம் standbyல இருக்க சொல்லிடுறேன்....அழகுல பாத்து மயங்கி விழுந்துட்டேனா? எனக்கு இந்த வாரம் நிறைய வே//

//அவனது கைகளை செல்லமாய் அடித்து, " hey pervert, stop staring at me."
//

loved these sections...chaanceleenga..lovely

Prabhu said...
This comment has been removed by the author.
Prabhu said...

பரவாயில்லயே, நினைசத விட நல்லா எழுதுறீங்களே! ;-)
நல்ல நடை! அப்படியே கொஞ்சம் லெப்டுக்கா நடந்து காட்டுங்க!
:)

Porkodi (பொற்கொடி) said...

nalla ezhudaringa! super flowla poitu iruku kadhai :) kaadhal rasathai anda andava oothringale.. chinna ilainga paathu oothunga! :)

@gils: ivlo jollu agadhu! :D

VISA said...

jet vegam. continue the tempo.

Anonymous said...

superb.......
ungalala mudincha feed burner unga pageku add pannunga...plz.

Sasi said...

EXCELLENT MAN.....
KALAKKITINGE! LIKE WATCHING MOVIE. EAGERLY WAITING FOR NEXT PART

ப்ரியமுடன் வசந்த் said...

அப்படியே காட்சிகளை கண் முன்னாடி நிறுத்துரீங்க எக்சலண்ட் ரைட்டிங் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் இந்த மூணாவது பார்ட் ரொம்ப பிடிச்சுபோச்சு...தொடர்ந்து அடுத்த பார்ட்க்கு வெயிட்டிங்..

Karthik said...

really nice one...:)

lol @ pappu comment. :D